Wednesday, May 30, 2012

நட்பு அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்...


காதல் தான் உன்னதமானது
என்று எண்ணிவிடாதே
அதைவிட மேலானது நட்பு
காதல் ஒருநாள்
உன்னை கைவிடகூடும்
ஆனால் உண்மையான நட்பு
உன்னை துயரதில் கூட கைவிடாது
காதல் உன்னை எதிர்பார்க்கிறது
உன்னை தனக்கே சொந்தமென
எண்ணவைக்கிறது
நட்பு உன் அன்பை மட்டும்தான்
எதிர்பார்க்கிறது.
உன் கண்ணீரை துடைக்க
உன் கைகள் உயரும் முன்னரே
நட்பின் கை உன் கண்ணீரைத்
துடைத்துவிடும்
உன்மையான நண்பர்கள்
யார் என்று தெரிந்து நட்பாய் இருந்தால்
உன் இறுதிக் காலம் வரை கூடவே வரும்
அதுதான் தூய்மையான நட்பு........

நிழலும் நிஐமாகும்


நிஐத்தை நம்பி
நிழலை வெறுக்கிறாயன்பே
நீ நம்பிய நிஐம் இன்று மட்டும்தான்
நாளை சற்றுத்திரும்பிப்பார்
நீ வெறுத்த நிழல்
அன்றுதான் நிஐம் எண்று உணர்வாய்
என்றும் உனக்காக
நீ பொய்யென நினைத்த அந்த நிழல்
உன்பார்வையில் பொய்யாக
நிஐமாக உன்கூடவே வரும்
இருவரும் சாகும் வரை......

கண்ணீர்


அன்பே!
உன் கண்களில் பிறந்து
உன் கன்னத்தில் தவழ்ந்து
உன் உதடுகளில் மரிக்கும்
உன் கண்ணீராய் நான்
ஆனால்...
நான் உவர்க்க மாட்டேன்
மாறாக இனிப்பேன்.
காரணம் வாழ்வது
சில நொடியாக இருந்தாலும்
அது உனக்காக இருக்க வேண்டும்
அதுவும் உன்னோடு இருக்க வேண்டும்.

கலைந்து போன காதல்



உன் பார்வையினில்
புரிந்து கொண்டேனடி
நீ என்னை காதலிக்கின்றாய் என்று
ஆனாலும்
ஏற்க மனம் தயங்குகிறதடி
என் குடும்பத்தின்
கனவுகள் கலைந்து விடுமோ
நான் காதல் கொண்டால் என்று?
என் குடும்பத்தின் கனவுகள் முன்
என் காதல் கனவுகள் ஒன்றும்
பெரிதாகத் தோன்றவில்லை
கலைத்துவிட்டேனடி
என் காதல் கனவுகளை
குடும்பத்தின் கனவுகளிற்காய்...

செய்த பாவன் தீர்த்திடத்தான்...!


மண்ணை  உருட்டி உலகைச்செய்த...
எங்களது இறைவா...!
தமிழ் இனத்தை -  இங்கிருந்து
உருட்டி விடல்...
அது உனக்குச் சரியா..?
விடிவிற்காக போரிட்டதே...
எங்களது இனம்,
விடியும் போது இருட்டவிட்டாய்...
எந்தளவு நியாயம்...?

மறுபிறப்பு தத்துவத்தை...
சொல்லிவைத்த நீயே...!
மறுபடியும் - எம்மை 
பிறக்க வைக்க வேண்டாமையா..! இறைவா...
இழவு வீடா...  மாற்றிவிட்டாய்...
எங்களது நாட்டை...
ஏன் கொடுத்தாய்...!
எங்களுக்கு இப்படியோர் கேட்டை...?

ஈழ மண்ணை அழிப்பதிலே...
உனக்கு என்ன பெருமை...!
ஏலுமென்றால் சொல்லிவிடு...
எங்களிடம்...பதிலை...!

அழுதழுது வற்றிப்போச்சி...
கண்ணிலுள்ள... நீரு
அழும்போது...
துடைப்பதற்காய்...வந்ததெல்லாம்...?
கறைபடிந்த கையி...!
அழுவதற்கு நீருமில்லை...
எங்களது
கண்ணில்...!அழு(கிறோம்)ம்போது,,,
வரவில்லையே - கல்
நெஞ்சக்கடவுள்
ஒருதடவை - வந்து
இங்கு
நீயும் கொஞ்சம் பாரு...
கடவுளே,,,!
உன்னைக்கொல்லும் - உந்தனது
மனதிலுள்ள நீதி.
உலக நீதி காத்திடத்தான் -  நீயும்
இங்கு வாவேன்..!
செய்த பாவன் தீர்த்திடத்தான்...
தமிழனுக்கு...
நாடு ஒன்றைத்தாவேன்.

Friday, May 25, 2012

மனதை உருக்கும் கடல் கன்னி [விடியோ இணைப்பு]

என் உயிர் உனக்கே சமர்ப்பணம்


என் கவிதைகள்
என்றும் உனக்காக
நீயோ என்றும்
எனக்கே எனக்காக
இதில் இல்லை மாற்றம்
இது புரியாமல் ஏன்
என் மீது கோபம்
உன் நினைவுகளின் நிழல்களில்
என் இருப்பிடம்
உன்னை இழந்த பின்
நானோர் நடைப்பிணம்
இரவுகள் எல்லாம்
என் குருஷோத்திரம்
இதை நீ அறிவதால் பிறக்குமா
என்மேல் கரிசனம்
உனை எண்ணியே உருகுதே
என் உயிர் தினம் தினம்
உறுதியாய் சொல்கிறேன்
இனி என் உயிர்
உனக்கே சமர்ப்பணம்.