Tuesday, May 22, 2012

கரும்புலி வீரர்களே!!!!


முகம் அறியாத உறவு அறியாத
எம் உறவுகளே!!!
மண் மீட்புக்காய் உயிர் கொடுத்தீர்
தமிழர் மனங்களெல்லாம் நிறைந்து நின்றீர்
மறைந்து விடவில்லை நீங்கள்
புதுவரலாறாய் பதிந்துவிட்டீர்
பிஞ்சுகள் மனதினிலே
கல்வெட்டாய் இருந்திடுவீர்
தெரிகிறதா எம்மையெல்லாம்
எம் தேசத்து உறவுகளே
என்று தென்றல் வடிவாக வந்து
கேள்வி கேட்டு நின்றீர்
நாங்கள் மண்ணையும் மறக்கமாட்டோம்
மண்ணுக்காய் மடிந்த
கரும்புலிகளையும் மறக்கமாட்டோம்
மாவீரர்கள் ஆறடி மண்ணை
சொந்தமாக்கினார்கள்
மண்ணுக்குள் துயில்கிறார்கள்
நீங்களோ அந்த மண்ணும்
வேண்டாம் என்று கரும்புலியாக
புறப்பட்டு தீயாகி
காற்றுடன் கலந்தீர்கள்
தமிழா,,,,உண்மையில் நீ தமிழன் என்றால்
உன்னையே கேட்டுப்பார்
கரும்புலி மாவீரர்களின் சாதனையை
நீ மறந்துவிட்டாயா என்று!
தாலாட்டி வளர்த்த உங்கள்
அன்னை தனை மறந்து
தாய் மண்ணையே நேசித்து
உயிர் கொடுத்த உத்தமரே
உங்களையே தீயாக்கி
எமக்காக எரிந்த உங்களை
தமிழர்கள் ஆகிய நாம்
எம் நெஞ்சில் வைத்து
தினம் தினம் வணங்கிடுவோம்
விழ விழ எழுவோம்
வீறு கொண்டு எழுவோம்,
தமிழீழம் தனை வெல்லும் வரை
நாம் ஓய்ந்திருக்க மாட்டோம்..

No comments:

Post a Comment