Wednesday, May 30, 2012

நட்பு அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்...


காதல் தான் உன்னதமானது
என்று எண்ணிவிடாதே
அதைவிட மேலானது நட்பு
காதல் ஒருநாள்
உன்னை கைவிடகூடும்
ஆனால் உண்மையான நட்பு
உன்னை துயரதில் கூட கைவிடாது
காதல் உன்னை எதிர்பார்க்கிறது
உன்னை தனக்கே சொந்தமென
எண்ணவைக்கிறது
நட்பு உன் அன்பை மட்டும்தான்
எதிர்பார்க்கிறது.
உன் கண்ணீரை துடைக்க
உன் கைகள் உயரும் முன்னரே
நட்பின் கை உன் கண்ணீரைத்
துடைத்துவிடும்
உன்மையான நண்பர்கள்
யார் என்று தெரிந்து நட்பாய் இருந்தால்
உன் இறுதிக் காலம் வரை கூடவே வரும்
அதுதான் தூய்மையான நட்பு........

No comments:

Post a Comment