நினைவுகளை
தொலைத்தவனாய்
சிதைத்தவனாய்
அந்த நினைவுகள்
என்னுணர்வுகளை
என் உடலிலிருந்து
வேறாக பிரித்தெடுத்து
ஐடமாக்கி நினைவற்றவனாக
என் கண்ணுக்கு தோன்றும்
இந்த பரந்த வெளித்திடலில்
முடிவை தேடுகிறேன்.
தொடர் நிகழ்வுகள் என்னை
தொடராக கலங்கவைத்து
மரத்து போன இந்த வாழ்வை
அழிப்பதற்க்கு நினைவுகள் இருந்தும்
நினைவற்றவனாக திரிகிறேன்
இந்த நினைவற்றவன்.
No comments:
Post a Comment