காலடியில்
விலகி இருக்கும்
தண்டவாளங்கள்
தூரமாய் பார்க்க
நெருங்குவதாய் தோன்றும்..
நம் பார்வை தெரியாத தூரத்தில்
அவைகள் இணையலாம் என்ற
நம்பிக்கை போதும்..
சோதித்துப்பார்த்து
சம்பாதிக்கபோவது ஏமாற்றமெனில்
ஏன் சோதிக்கவேண்டும்..
அவைகள் இணைந்திருக்குமென்ற
நம்பிக்கையே போதும்...
No comments:
Post a Comment