Friday, May 25, 2012

தொடராத வீணை


சின்னப்பாலமுனை பாயிஸ்
பூவையின் உச்சி முகர்ந்து
கூந்தல்களைக்  கோரிய
என் விரல்கள்
கோவை இதழ்களையும்
மெதுவாய் கிள்ளிக்கொள்ள
கருகிய காம்பாய்
சுருங்கி உதிர்ந்து
தரையில் படர்ந்தது
வீணையின் வடிவமாய்
தரையை அலங்கரிக்க
என் விரல்கள் துடித்தன
அதனை வாசித்துக்கொள்ள
வீணை மூடிய சீலை
காற்றில் அசைந்தாட
இதயத்தில் மேளதாளம்
ராகம் தொடரும்
இடம் தெரியாமல்
இடைநடுவே
விரல்கள் நடனமாட
சங்கதி நீண்டு கொண்டன
சுதி நழுவாமல்
சுவை ஏறிச்செல்ல
ரகரகமாய் ராகங்கள்
பெருகி வந்தது
பல்லவி சருகாமல்
கீதம் தொடர்ந்து கொள்ள
வீணை முறிந்து கொண்டது
முழுமைபெறாத கானமுமாய்
தொடராத வீணையுமாய்
ராகம் தேடும் ரசிகன்............

No comments:

Post a Comment