Tuesday, May 22, 2012

ஈழத்துக் காதலி


வகுப்புகளில்
உன் மேசைகளில்
எழுதும் கவிதைகளை பார்த்து தான்
காதலிக்கவே கற்று கொண்டாய்
நானோ!
அன்றில் இருந்து
ஆசிரியர்களிடம் அதிகமாக
அடிவாங்க கற்று கொண்டேன்..
மெழுகுவர்த்தியின் மெல்லிய
வெளிச்சத்தில் நானும் நீயும்
சாப்பிடும் ''டின்னெர்'' ஞாயிறுகளுக்காக
மிச்ச ஆறு நாட்கள்
பட்டினியுடன் காத்து கிடக்கிறேன்...
காதலுடன்..
அன்று உன் வீட்டுக்கு
வந்த போது
நீ தந்த உன் கைபட்ட
தேநீர் போல்
இன்றும் தருவாயா!
சிறு துளி கண்ணீருடன்...
கிளைமோர் வெடிக்கும்
காலங்கள் ஞாபகம்
இருக்கிறதா....
அன்று ஆர்மி போடும்
''கொன்வேயில்'' வளர்ந்தது
நாட்டு பிரச்சனை மட்டுமல்ல....
நம் காதலும் தான்....
ஒரு மழை இரவில்
உன் மனதின்
நிர்வாணத்தையும்
ரசித்தேன்..
அன்று நீ உன் காதலை
சொன்ன நாள்.....
தபாலகமே காதலி அனுப்பும்
கடிதத்துக்கு சீல் குத்தாதீர்!!!!!!!!
கடிதத்தில் வருவது காதல் அல்ல.
காதலி...
ஈழம் செத்து
விட்டதாய் சொன்னார்கள்.
இவள் கண்களில்
என் ஈழத்தை பார்க்கிறேன்...

No comments:

Post a Comment