Friday, May 25, 2012

இறைவன்


இறைவன் ஜீவனுக்காய் ரட்சித்த உலகை
ஜீவநதிகள் இரட்சித்தது இறைவனை
இறைவன் மனிதனை தெரிந்து கொண்டான்
மனிதன் இறைவனை தேடி
மதங்களை வளர்த்துக்கொண்டான்
எல்லா உயிருக்கும் வயிற்றில் பசி
எல்லா உயிருக்கும் முகத்தில் கண்
எல்லா உயிருக்கும் ஜீவன் ஒன்றே
அந்த ஜீவன் அனைத்திற்கும்
தலைவன் ஒன்றே
அவன்தான் இறைவன்
மதங்கள் என்று முத்திரைகுத்தி
இனங்கள் பிரிந்தது - அதனால்
இறைவன் தொலைந்துபோனான்
மதம் என்பது சாக்கடை
நீ வீழாவரைக்கும் ஞானி
இறைவனை மட்டும் அறிந்துகொள்
உன் நன்மை தீமை அவன் அறிவான்.

No comments:

Post a Comment