ஜீவநதிகள் இரட்சித்தது இறைவனை
இறைவன் மனிதனை தெரிந்து கொண்டான்
மனிதன் இறைவனை தேடி
மதங்களை வளர்த்துக்கொண்டான்
எல்லா உயிருக்கும் வயிற்றில் பசி
எல்லா உயிருக்கும் முகத்தில் கண்
எல்லா உயிருக்கும் ஜீவன் ஒன்றே
அந்த ஜீவன் அனைத்திற்கும்
தலைவன் ஒன்றே
அவன்தான் இறைவன்
மதங்கள் என்று முத்திரைகுத்தி
இனங்கள் பிரிந்தது - அதனால்
இறைவன் தொலைந்துபோனான்
மதம் என்பது சாக்கடை
நீ வீழாவரைக்கும் ஞானி
இறைவனை மட்டும் அறிந்துகொள்
உன் நன்மை தீமை அவன் அறிவான்.
No comments:
Post a Comment