Tuesday, May 22, 2012

காதல் என்பது கனிவான பேச்சி...!


காலம் நாலு பருவமாச்சி - என்
காதல் உன் மேலாச்சி...
மோதல் எமக்குள் இல்லாமல் போச்சி...!
சாதல் வரை சந்தோஷமாச்சி...!!

இன்பம் தருதல் உனக்கான பேச்சி - என்னை
சந்தோசப்படுத்தலே உன் வேலையாப்போச்சி...
துன்பம் எமக்குள் இல்லாமலாச்சி...!
சொர்க்கத்திலே எமது வாழ்வாகிப்போச்சி...!!

கோபம் சில முறை வந்தாகிப்போச்சி....
ஊடல் கூட பல முறையாச்சி...!
பிரிதல் எமக்குள் நடவாத பேச்சி...!!
அலட்டுதல்தானே நாள்தோறும் பேச்சி...!!!

உன்மேல் எனக்கு பைத்தியமாச்சி...
உன் சொந்தத்தைக்கூட எனக்கு பிடிச்சேபோச்சி...!
உலகில் உன்னைக்கண்ட தாய்யாச்சி...!!
கடவுளுக்கு நன்றி சொல்லியுமாச்சி...!!!

என் மனதுள் நீயும் உட்காந்தாச்சி...
இதயம் இரண்டும் ஒன்றாகிப்போச்சி...!
காதல் என்பது கனிவான பேச்சி...!!
இதுவே காலம் முழுவதுமாச்சி...!!!

No comments:

Post a Comment