Tuesday, May 22, 2012

நிரந்தரமில்லை...


கத்தி இன்றி யுத்தமில்லை
கண்கள் இன்றி காதல் இல்லை
வழியின்றி வாழ்க்கை இல்லை
வலி இன்றி துயரமில்லை
அன்பு இன்றி அன்னையில்லை
ஆசை இன்றி மனிதனில்லை
வேரின்றி மரங்கள் இல்லை
மணம் இன்றி மலர்கள் இல்லை
சுற்றும் இந்தப்பூமிதனில்
சுகமும் துக்கமும் இயற்கையெனில்
மனதார மறுத்துப் பேச
மானிடனால் முடிவதில்லை
ஒன்றை மட்டும் உறுதிசெய்
உலகில் எதுவும் நிரந்தரமில்லை
இதுவும் விலகிப் போகும் என்ற
எண்ணம் மட்டும் நிறுத்தி வை.

No comments:

Post a Comment