Tuesday, May 22, 2012

உன் மூச்சோடு நானும்


பூத்திருந்து
கண்கள் புண்ணாக
நோகின்றது
மூச்சிவிடும்
தென்றல் முள்ளாக
தைக்கின்றது
துணையில்லா
நெஞ்சம் தவியாய்
தவிக்கின்றது.......
நீயோ..!
காத்திருக்க சொல்லி.
காற்றோடு போனாயா..?
உன் மூச்சோடு
நானும் மூச்சற்று
வாழ்கின்றேன்...

No comments:

Post a Comment