Friday, May 25, 2012

வருவாயா தேடி....


சில்லென்று சிதறும்
மழைத் துளிபோல - உன்
வரவு இனித்த கணங்கள்
நினைவில் எழுந்து - கண்களை
பனிக்க வைக்கிறது.
களங்கமில்லா காதலில்
கனிவான உன் முக
தரிசனம் கூட சுகமானது...
எஞ்சிய வாழ்வில்
மிஞ்சிய உன் நினைவுகள்
வஞ்சி எனை வதைப்பதால்
மீதி நாளெல்லாம்
வேதனை மட்டும் மீதமாய்...
நெடுதுயர்ந்த கம்பீரத்தில்
நெடுநாளாய் நீ என்னுள்
நெருங்கி வர முயாமல்
நொறுங்கி உள்ளம் நிற்கிறது..
நீண்ட நாட்கள் உனைக் கண்டு - மனம்
துண்டாகி அழுகிறேன் இன்று..
உறவுக்காய் உனை இழந்தேன் - என்
மறைவுக்காவது வருவாயா தேடி..!!!!!
உனைக் கண்டு
உயிர் விடவே எனதாசை..
உயிர் தரித்து வருவாயா எனக்காய்...!!!!!

No comments:

Post a Comment