Tuesday, May 22, 2012

என் உயிர் பிரியும் போது...

உதயா

என்னில் நீயென்று
உன்னில் நான் என்று
கண்ணிலே கவிகொண்டு
கலந்திருந்தேன்
காதலில் உயிர் கொண்டு
அன்பென்றால் நீயென்று
அரவணைத்தேன் என் உயிர் கொண்டு
உன் உள்ளம் எனக்கென்று
எழுதினேன் உயில்
என் உயிரும் உனக்கென்று
என்னை நீ வெறுத்தாலும்
என்னை நீ பிரிந்தாலும்
என்னை நீ மறந்தாலும்
என்னை நீ அளித்தாலும்
என்னை நீ சிதைத்தாலும்
என் உள்ளம் உன்னையே நேசிக்கும்
என் இதயம் உனக்காய் துடிக்கும்
என் சுவாசம் உனக்காய் சுவாசிக்கும்
என் உயிரும் உனக்காக உடலில் இருக்கும்
என் உயிர் பிரியும் போது
என் உடல் உனக்குரியதாகதான் இருக்கும்.

No comments:

Post a Comment