Tuesday, May 22, 2012

உயிரும் நீயடி ,,,!


உயிரிலே கலந்து
உள்ளத்தில் வாழ்பவளே
உயிரும் உனக்கென்று
உயில் எழுதி வைத்தவன் நானடி - பின்
உற்றவர் பேச்சினிலே
உளறுவது தினமும் நீயும் ஏனடி
உண்மையை உணராவிடின்
உலகமும் ஊமையடி
உள்ளத்தில் உதிர்த்த காதலை
உற்றவர்களுக்காக உதற
உணர்வற்றவள் நீயில்லையடி
உலகமே வெறுத்தாலும்
உறவுகள் எதிர்த்தாலும்
உறுதியாய் உரைக்கின்றேன்
உயிரின் பந்தமும் நீயே - என்
உள்ளத்தின் சொந்தமும் நீயே
உற்றவளாய் எனை ஆழும் உயிரும் நீயடி ,,,!

No comments:

Post a Comment