Tuesday, May 22, 2012

தூக்கம் திருடி விட்டாய்..


தூக்கத்தை திருடிக்கொண்டு
இனிய கனவுக்கு வாழ்த்திவிட்டு
விடை பெறுகிறாய்..
தூக்கத்தை தொலைத்த பிறகு
எங்கிருந்து வரும் கனவு..??
இமைகள் மட்டும்
இல்லாதிருந்தால்
உன் விழிவீச்சின்
தொடர் தாக்குதலில்
எத்தனை பேர்
இறந்திருப்பார்களோ..!!
ஊடல் காலங்களில்
கருக்கொண்ட முத்தங்களே
கூடலில் அதி வேகமாய்
பிரசவிக்கப்படுகிறது...
ஒவ்வொருவர் பிறந்த நாளிலும்
ஒரு நட்சத்திரம் தோன்றுமாம்..
நீ பிரிந்த அன்று
ஒரு நட்சத்திரம்
உதிர்ந்து விழுந்த வினாடியில் தான்
அதை நம்பத்தொடங்கினேன் நான்..!!!
உயிர் பிரியும் வேதனையை
என்னால் எளிதாய்
எடுத்துக்கொள்ள முடியும்...
ஒவ்வொரு முறை
நீ என்னை விட்டு
பிரியும் போதெல்லாம்
ஒத்திகை நடந்திருப்பதால்.. !!!

No comments:

Post a Comment