Friday, May 25, 2012

என் சுவாசமே ....


எங்கோ இருந்து....
நீ எழுதும்....
வரிகளை நேசிக்கிறேன்.....
உனக்காய்.....
ஒரு உருவம் வரைந்து ....
தினமும் ....
அழகு பார்க்கிறேன்.....
உன்முகம் தெரியாமலே ...
வார்த்தை விளையாட்டில்...
ஏன் வாழ்க்கை.... 
உன் மௌனங்களுக்குள் ....
சிக்கிக்கொண்டதே ....
மீட்டுக்கொடுத்துவிடு ....
உன் மௌனச் சிறைக்குள் ...
எனை ...
ஆயுட்கைதி ஆக்கிவிடாதே....
வலுவிழந்து போன ...
கைகளை பற்றிப்பிடித்து....
எழுத வைத்த நீயே ...
என் கைகளை ...
ஒடித்து விடாதே ....
உன் வரிகளே ...
என் சுவாசம்...
என்று தெரிந்தும் ....
ஏன் எழுத மறுக்கிறது....
உன் பேனா ...
உன் வார்த்தைகள் ....
எனை புண்படுத்திவிடும்...
என்பதற்க்காய் ....
மௌனத்தை நேசிக்கும் நீ ....
இன்னும் புரிந்து கொள்ளவில்லை ......
உன் மௌனங்களால் .....
நான் தினமும் இறந்து கொண்டிருப்பதை.....

உன் மௌனங்களை விட .....
கொடுமையான பதில் ....
உன்னிடம் இருக்காது .....
அதை உனக்காக எழுதாவிடினும் .....
உன் வரிகளை சுவாசிக்கும் ....
ஓர் இதயம்...
உயிர் வாழ்வதற்காய் எழுது.....

No comments:

Post a Comment