Tuesday, May 22, 2012

காற்றோடு வாழ்கிறேன்


சிரிக்கிறேன் தனிமையிலே
நிஜம்தானோ இதுவென்று
நித்திரையில் வீழ்ந்தபின்னே
வான்வெளியில் நடக்கிறேனே
கற்பனையில் காண்பதெல்லாம்
ஆன்மாவை தேடுதே
குளிரிலும் என்னுடல்
உறையவில்லை பெண்ணே!
மனத்திரையில் மாட்டிவைத்தேன்
விழித்திரையில் கோர்த்து வைத்தேன்
உன் ஆசைகளை சேர்த்து வைத்தேன்
இறுதியிலே உன்னிடத்திலென்
காதலைத்தான் தொலைத்து வந்தேன்
மீண்டும் உயிர் பிழைத்து வந்தேன்
உன்வசம் உள்ளதை இல்லையென்றாய்
என் காதலை வாங்கிய பின்னே...
இல்லையில்லை பொய்யென்றாய்
போடா பொறுக்கியென்றாய்
இத்தனைக்கும் வாடி நின்றேன்
கடைசியில் தானே போடி யென்றேன்
என்னுணர்வுகள் தின்ற பெண்ணே
நெஞ்சம் பதைக்கவில்லையா?
ஓரக்கண்ணால் பார்த்தாய் அறியாமல்
முழுப் படமாய் போனேனே
இன்று நிழற்படமாய் ஆனேனே
காற்றோடு வாழ்கிறேன்
உனை தொட்டுச் செல்கிறேன்
என் வாசம் புரிகிறதா உன்வசம்
உருவமில்லா உவமையானேன்
காதலர்களே காதலிக்கு(ம்) முன்னேயும்
கவனமாயிருங்கள் காதலுக்கு பின்னேயும்..

No comments:

Post a Comment