Tuesday, May 22, 2012

நீதான்

நான்
இப்போதெல்லாம்
நிஜத்தில் சிரிப்பதைவிட
உன் கனாக்களில் சிரிப்பதுதான் அதிகம்
உன்னை
மறக்க நினைக்கும் நிமிடங்களில்
எதோ ஒன்று எனக்கு புதிதாய்
உன்னை அறிமுகபடுத்தி வைக்கிறது
நான்
அநாவசியமாய் குழம்பித்தவிக்கிறேன்
உன் அருகாமை என்னமோ
எனக்கு அவசியமாகப்படுகிறது
யாரிடமும்
அடிபணியாத மனசு
உன் இழுப்புக்கெல்லாம் இஸ்டம் போல
செல்லக்குழந்தையாய் அடங்குகிறது
எதிலும்
சுயம் தொலையாத நான்
உன்னிடம் மட்டும் தொலைக்கிறேன்
என்னை ......

No comments:

Post a Comment