Wednesday, May 30, 2012

செய்த பாவன் தீர்த்திடத்தான்...!


மண்ணை  உருட்டி உலகைச்செய்த...
எங்களது இறைவா...!
தமிழ் இனத்தை -  இங்கிருந்து
உருட்டி விடல்...
அது உனக்குச் சரியா..?
விடிவிற்காக போரிட்டதே...
எங்களது இனம்,
விடியும் போது இருட்டவிட்டாய்...
எந்தளவு நியாயம்...?

மறுபிறப்பு தத்துவத்தை...
சொல்லிவைத்த நீயே...!
மறுபடியும் - எம்மை 
பிறக்க வைக்க வேண்டாமையா..! இறைவா...
இழவு வீடா...  மாற்றிவிட்டாய்...
எங்களது நாட்டை...
ஏன் கொடுத்தாய்...!
எங்களுக்கு இப்படியோர் கேட்டை...?

ஈழ மண்ணை அழிப்பதிலே...
உனக்கு என்ன பெருமை...!
ஏலுமென்றால் சொல்லிவிடு...
எங்களிடம்...பதிலை...!

அழுதழுது வற்றிப்போச்சி...
கண்ணிலுள்ள... நீரு
அழும்போது...
துடைப்பதற்காய்...வந்ததெல்லாம்...?
கறைபடிந்த கையி...!
அழுவதற்கு நீருமில்லை...
எங்களது
கண்ணில்...!அழு(கிறோம்)ம்போது,,,
வரவில்லையே - கல்
நெஞ்சக்கடவுள்
ஒருதடவை - வந்து
இங்கு
நீயும் கொஞ்சம் பாரு...
கடவுளே,,,!
உன்னைக்கொல்லும் - உந்தனது
மனதிலுள்ள நீதி.
உலக நீதி காத்திடத்தான் -  நீயும்
இங்கு வாவேன்..!
செய்த பாவன் தீர்த்திடத்தான்...
தமிழனுக்கு...
நாடு ஒன்றைத்தாவேன்.

No comments:

Post a Comment