Tuesday, May 22, 2012

நீ


என் தொலைவானம் நீயா
எனைத் தீண்டும் மழைத்தூறல் தானா 
என் விழி தேடும் ஒரு தேவதை நீயா
எனைத் தினம்தோறும் தொடுகின்ற ஆனந்தம் தானா
என் மனம் தடுமாறும் தடுமாற்றம் நீயா
எனைத் தடம் மாற்றும் ஒரு போதை தானா
என் கருமாரி நீயா
எனைக் கரையேற்றும் ஒரு தெய்வம் தானா
எனை வாட்டும் பெருங்காதல் நீயா
என்னுயிர் விலை பேசும் வியாபாரி தானா
என் கரும்பாலை நீயா
எனைத் துரும்பாக்கும் துயரங்கள் தானா
என் சுவர்க்கங்கள் நீயா
எனைக் கேட்காமல் பொழிகின்ற ஒரு மாரி தானா 
என் பருவங்கள் நீயா
எனை உருமாற்றும் ஒரு சக்தி தானா
என் திருத்தங்கள் நீயா
எனைத் திசை மாற்றும் பெண் புத்தன் தானா.

No comments:

Post a Comment